Wednesday, September 21, 2016

செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி....

21/09/2016  

கொஞ்ச காலத்திற்கு முன்னால் நான் சிறுவனாக இருந்தபோது வானொலியில் பாடல் கேட்பதும் கேட்டுக் கொண்டே குறிப்பேட்டில் அந்தப் பாடலை அதே வேகத்தில் எழுதுவதும் பழக்கம். 

ஒரு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை எனக்கு அந்த முழுப்பாடலும் தெரியாது. வானொலியிலும் முழுப்பாடலை ஒலிபரப்பிக் கேட்டதில்லை... 

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
ஒரு தெய்வமில்லமல் கோவிலுமில்லை
ஒரு கோவில்லாமல் தீபமுமில்லை
நீ அந்தக் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
அந்த செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வரை முழுப்பாடல் இவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன்...
காலை 7.00 என்னிடம் ஒரு தாள் வந்து சேர்ந்தது. அந்தத் தாளில் இந்தப் பாடல் வரிகள். ஆனால் மேலும் ஒரு பத்தி
என் மேனியில் உன்னைப் பிள்ளையைப் போலே - நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல 
அதிகமாக இருந்தது...

எனக்கு ஒன்றும் புரியவில்லை... பிறகுதான் தெரிந்தது அந்தத் தாளில் எழுதியிருந்ததுதான் முழுப்பாடல் என்று.

இந்த நாளில்தான் எனக்குத் தெரிந்தது... நீயொரு பாதி நானொரு பாதி என்று.... 

No comments: