Saturday, October 16, 2021

இழப்பு

            சிங்கை வந்துவிட்டதால் தமிழக உறவுகளின் நிகழ்வுகள் அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக் காலங்களில் மட்டுமே என்றாகிவிட்டது. எத்தனையோ விழாக்கள், கொண்டாட்டங்கள், மனத்திற்குப் பிடித்தவை, மனத்திற்கு நெருக்கமானவை இப்படி எத்தனையெத்தனையோ இழந்துவிட்டேன். திரும்பப் பெறமுடியாத பல...

    பளிங்கு விளையாடுவது, தெருவில் உள்ள பிள்ளைகளை அடிப்பது, மிரட்டுவது, அன்பைக் கொட்டிக் கொடுப்பது... துவையல் அரைக்க அம்மியில் வைத்திருக்கும் தேங்காய், பொட்டுக்கடலைகளை, மிளகாயை ஒதுக்கிவிட்டு எடுத்துச் சாப்பிடுவது,

           அம்மா அரைப்பதற்காகக் காயவைத்திருக்கும் மல்லியில் போட்டிருக்கும் பொட்டுக் கடலையை ஒவ்வொன்றாக் பொறுக்கிச் சாப்பிடுவது...

            இப்படி இன்னும் எத்தனை எத்தனை இன்பங்களை இழந்துவிட்டேன். 

            இனி இழப்பதற்கு???