சற்றுமுன்னர்
ஒருசில சொல்ல முடியாத காரணங்களால் என் மகளும் மகனும் தாங்களும் மடையர்கள் என்பதை
மெய்பிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தனர். நான் சிறிது கோபமாகவே இருந்தேன்.
ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் ஒரு பக்கம் சற்று கோபமாகத்தான் இருந்தேன்...
வலிய
சில காரணங்களை ஏற்படுத்திக் கொண்டு அவர்கள் அறியாதவாறு கண்காணித்தேன்.
மடையர்களாகிவிடுவார்களோ என்று எனக்கு உள்ளூர சற்றுப் பயமே... என் அச்சம்
உறுதியானது. என் மகன் கொதிக்கும் குழம்பைக் கரண்டியில் எடுத்துக் கொண்டு என்
அருகில் வந்தான்...
என்னிடம்
தங்களின் திறமையை மெய்பித்து எப்படியும் பாராட்டு வாங்கிவிட வேண்டும் என்பதில்
முனைப்பாயிருந்தனர் என் மக்கள்.
கொதிக்கும்
பருப்புக் குழம்பின் மனம் மெல்ல என்னை இழுத்தது... நான் என் முகத்தில் எந்த
உணர்ச்சியையும் காட்டவிரும்பவில்லை.
கையில்
கரண்டி, கரண்டியில் கொதிக்கும் குழம்பு.
அப்பா
என்று என் மகன் அழைத்தான். அந்த அழைப்பு வழக்கமான அழைப்பல்ல. முகத்தை நேராகக்
காட்ட எனக்குச் சிறிது தயக்கம்தான்.
என்ன? - சற்று அதட்டலாகக் கேட்பது போல்
நடித்தேன்.
கரண்டியில்
இருந்த குழம்பை வாயால் நான்கைந்து முறை ஊதி ஊதி... அதிலும் மனநிறைவடையாமல் என்
மகன் அவனுடைய கையில் ஊற்றிப் பார்த்து சூடு ஆறிவிட்டதை உறுதி செய்துகொண்டு என்
கையில் கரண்டியில் மீதமிருந்த குழம்பை ஊற்றிவிட்டு எதிர்பார்ப்போடு என் முகத்தைப்
பார்த்தான்.
ம்...ம்...
நல்லாருக்கு என்றவுடன் மெல்லிய புன்னகையோடு வெற்றி பெற்ற பெருமிதத்தோடு
நகர்ந்தான்.
மகளோ
எதையுமே காட்டிக் கொள்ளவில்லை... ஒருவித அலட்சியம்... ம்... பருப்புக் குழம்பு
வைப்பது என்ன பெரிய கம்பசித்திரமா என்பது போல... அமைதியாக நின்றாள்...
ம்...
நான் அமைதியாக நகர்ந்து வந்துவிட்டேன். மடையனின் பிள்ளைகளும் மடையர்களே...
-------------------
(இதில்
ஒரு முக்கியமான என் மனத்தைத் தொட்ட பகுதி என்னவெனில்... எனக்குக் கை சுட்டுவிடக்கூடாது
என்று எண்ணி என் மகன் தன் கைகளில் ஊற்றிப் பார்த்தபின்னர் என் கையில் ஊற்றிய
பாங்கு... )