Thursday, November 03, 2016

சீம்பு எனப்படும் தேங்காய்ப்பூ




சாதாரணமாகத் தேங்காயை உடைத்தால் இரண்டு அரைக்கோள வடிவ தேங்காய் மூடிகள் கிடைக்கும். வெள்ளை வெளேரென்று பளிச்சிட்டுச் சிரிக்கும். தேங்காய் நன்றாக முற்றிய பிறகு முளைவிட ஆரம்பிக்கும். தேங்காயின் ஒரு மூடியில் அதன் கண் என்று சொல்லப்படும் துளையை அழுத்தினால் அதிலிருந்து துவரம்பருப்பு அளவில் வரும். அதைத் தின்றால் சுவையாக இருக்கும்.

நன்கு முற்றிய தேங்காயை அப்படியே சில நாட்களுக்கு விட்டுவிட்டால் சிறிய அளவில் குறுத்துவிடத் தொடங்கும். தேங்காயின் உள்ளே அந்தக் குருத்து முட்டை போன்ற வடிவில் வளரத் தொடங்கும்... ஒரு கட்டத்தில் அது தேங்காய் முழுவதும் அடைத்துக் கொள்ளும். அந்தக் காலக்கட்டத்தில் தேங்காயை உடைத்தால் அதனுள் தக்கை போன்று உருண்டை வடிவத்தில் இளம் மஞ்சள் கலந்த வெண்மை நிறத்தில் இருப்பதே சீம்பு எனப்படும். சாதாரணமாக இதைத் தேங்காய்ப்பூ என்றுதான் சொல்வார்கள். 03/11/2016 இன்றுதான் முகநூல் தோழி பரிமளாதேவி மூலம் இதன் பெயர் சீம்பு என்று தெரிந்து கொண்டேன். நன்றி.

No comments: