Saturday, March 11, 2017

வாட்போர்....

இன்று யாரும் எதிர்பார்க்கவில்லை... திட்டமிட்டதைவிட அரைமணி நேரம் தாமதமாகத்தான் போர்க்களத்தினை அடைந்தோம். தனித்தனிக் குழுக்களாகப் பிரிந்தோம்... இன்று முழுவதும் வாட்போர்தான் அவரவர் போருக்குத் தயாரானோம்... தக்க உடைகளணிந்து வாட்களைச் சோதனையிட்டு... எல்லாம் முடிந்தது.




தந்தையும் பிள்ளையும் வாட்போரிடுவது என்றுதான் முதலில் சொன்னார்கள். 

பிறகு பிள்ளைகள் ஒருபுறம் தந்தையர் ஒருபுறம் போரிட்டோம்... வெற்றி பெற்ற இரண்டு குழுக்களும் இறுதியாக மோதின...
என்னோடு மோதுவதற்குத் தயாராக இருந்தவர் ஒரு சீன ஆசிரியர். அறிவிப்புக்காகக் காத்திருந்தோம்... அறிவிப்பும் வந்தது... போர் தொடங்கியது.
எதிராளி திறமையானவர்தான். எதிர்ப்பு கடுமையாகத்தான் இருந்தது. முதலில் சற்று யோசித்தேன். எதிரி என வந்தபிறகு யோசிக்கக்கூடாது...
என் மனக்கண் முன்னால் அரசிளங்குமரி ம.கோ.இராவும் நம்பியாரும் வந்தனர்... வாட்போரின் திசை திரும்பியது. டன் டணார், டிங், டிங்...டங்... டிங், டங், டணார், டிங்ங்ங்ங்......

அந்த அணியினரைவிட நான் பத்து புள்ளிகள் அதிகம் பெற்றேன்... போர் முடிந்தது என அறிவிக்கப்பட்டது. இருவரும் கைகுலுக்கி களத்தைவிட்டு வெளியேறி... போருடைகளைக் களைந்தோம்...



குழுவாகப் படம் பிடித்துவிட்டு வெளியே வந்தோம். தந்தை பிள்ளைகளுக்கான நிகழ்ச்சியை வெற்றிகரமாக மகிழ்ச்சியாக முடித்த நிறைவோடு மாணவர்களையும் அவர்களின் தந்தையர்களையும் அனுப்பிவிட்டு வீட்டுக்கு என் மகனுடன் வந்தேன்... நல்லவேளையாக எனக்கும் என் மகனுக்கும் கத்திச்சண்டை நடைபெறவில்லை... 

No comments: