Wednesday, February 03, 2010

மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா…..?

எனக்கு மின்மடலில் வந்த ஒரு செய்தி. உங்கள் அனைவரின் சிந்தனைக்காகவும் இதில் மறுபதிவிடுகின்றேன்.

நவம்பர் 26 ஒரு வருடம் ஆகிவிட்டது, மும்பையிலே குண்டு வெடிப்பு,அதற்காய் விளக்கு ஏற்றுகிறாள் நம் தமிழ் பெண் மரினா கடற்கரையில். ஊடங்கள் இந்தியாவே கண்ணீர் அஞ்சலி செலுத்துவது போல் பிம்பம்கள் ஏற்படுத்தினர். இதே தமிழ் பத்தரிகைகள் ஊடகங்கள் ஒரு இனப் படுகொலை பக்கத்தில் நடந்திருக்கிறது அதைப் பற்றி ஏன் பேசவில்லை. ஏன் சாகிறவன் தாஜ் ஹோட்டலில் தங்குகின்றவனாகத்தான் இருக்க வேண்டுமா..?

மும்பையில் தாக்குதல் நடந்த போது சச்சின் வருத்தம் தெரிவித்தார். இதே சச்சின் இலங்கையில் குழந்தைகளைப் பக்கத்தில் கொன்று குவித்த போது பக்கத்தில் சதம் அடித்து சவம் போல் நடந்து கொண்டது ஏன்.சண்டை உச்சத்தில் நடந்து கொண்டிருந்த போது விளையாட்டு தேவையா?? அப்பொழுது இந்திய அணி வெற்றி பெற்றதைத் தமிழன் ஏன் கொண்டாடிக்கொண்டிருந்தான் இதே தமிழன் மும்பை குண்டு வெடிப்பிற்கு கண் கலங்குகிறான். நாமெல்லாம் வணிகக் குப்பைகளாகி விட்டோமா. மனித நேயத்திற்கு கூட விளம்பரம் தேவைப்படுகிறதா??????

அங்கே சண்டை உச்சத்தில் நடந்துகொண்டிருந்த போது அங்கே இந்திய அணி விளையாடச் சென்றதேன்? என் நண்பர்கள் அந்த சமயத்தில் தொலைகாட்சியை பார்த்துக்கொண்டிருந்தனர்…

நான் அவர்களைத் திட்டினேன்???பதிலுக்கு “நாம் பார்கவில்லை என்றால் அங்கே சண்டை நின்று விடுமா ??” என்று வாதாடினான் என் நண்பன். நான் சொன்னேன் “நம் வீட்டில் யாரோ இறக்கிறார்கள், அவர்களை நம்மால் உயிருடன் கொண்டு வர முடியாது,அதற்காக நாம் நீலப் படம் பார்த்துக்கொண்டிருபோமா?” என்றேன் அவன் பேசவில்லை ஆனால் தொலைக்காட்சி மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தான். இது என்ன மனித நேயம்…

நாம் விளம்பரங்களுக்கு விலை போய் விட்டோமா. ஊடகங்கள் ஒன்றை நன்றாய் காட்டினால் நாம் வருந்துகிறோம்.மும்பை குண்டு வெடிப்பை ஆங்கிலத் தொலைக்காட்சிகள் நேரடியாய் ஒளிபரப்பின.ஆம் உடனே உப்பு சப்பில்லாத wednesday உன்னை போல் ஒருவன் போன்ற படங்கள் வந்தன. கமலஹாசன் தான் யாருமே சொல்லாத கருத்தைச் சொல்வதாகத் தொலைக்காட்சியிலே கதைத்துக்கொண்டிர்ந்தார். அடி மட்ட தீவிரவாதியைக் கொள்வதால் பிரச்சனை தீர்ந்ததா…..ஏன் மகேஷ் பட் மகன் மாட்டி உள்ளாரே அவரை encounter செய்ய முடியுமா. sanjai dutt இன்னும் நட்சத்திர அந்தஸ்து உள்ளதே கமஹாசன் சட்டையைப் பிடித்துக் கேட்பாரா???????

முதலாளித்துவ கருத்து ,,,,,,தீவிரவாதியாய் இருந்தாலும் அடியில் இருப்பவன் மட்டுமே கொலை செய்யப்படுவான்.
ஈராக் செய்தால் அது தீவிரவாதம்,அமெரிக்கா செய்தால் அது தீவிரவாததிற்கு எதிரான புனிதப் போர். கலைஞர் முதலாளியாய் கொடி பிடித்து, மௌனமாய் மட்டும் அழுவார்.

கமல் முதலாளிகள் இறந்தால் மட்டும் “வன்முறைக்கு வன்முறை தீர்வு ” என்று குரல் கொடுப்பார்……………….ஏன் இந்திய இளைய சமுதாயத்தின் விடி வெள்ளி அப்துல் கலாம் குரல் கொடுக்க வில்லை இலங்கை பிரச்சனைக்கு….அவர் ராமேஸ்வரம் வேறு அவருக்கு தெரியாதா ??????

ஏன் மும்பையில் அமெரிக்காவில் செத்தால் தான் உயிர்களா? மத்ததெல்லாம் ………..?????
ஏன் வணிகக் குப்பையாகி விட்டோம் …………..மனித நேயத்திற்கு விளம்பரம் செய்தால் தான் குரல் கொடுப்போமா ….இல்லை முதலாளிகளுக்கு மட்டும் குரல் கொடுக்கும் அடிமை உளவியல் நம்மில் இருக்கிறதா????

ஏன் லட்சக் கணக்கான குழந்தைகள் சாகும் போது நாம் மானட மயிலாட பார்த்துக்கொண்டிருந்தோம் ……….

மட்டைப் பந்து வீச்சு பார்த்துக்கொண்டிருந்தோம்,டோனி லக்ஷ்மிராய் படுக்கை அறைக்கு விளக்கு பிடித்தோம் …..

மும்பையை நியாபகம் வைத்து விளக்கு வைக்கும் தமிழ்ப் பெண்களே,தமிழனுக்காக உயிர் கொடுத்த ,ஈழப் பெண் மானம் காக்க உயிர் விட்ட திலீபன் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.செப்டம்பர் 11 என்றால் மட்டும் எப்படி மனித நேயம் பொத்துக்கொண்டு வருகிறது. எங்கு மனிதக்கொலை நடந்தாலும் என் மனம் வலிக்கிறது ….என் மனம் அமெரிக்கனுக்கு மட்டும் அழும் பக்குவத்திற்கு வர வில்லை ….!

நன்றி

தமிழகத்திலிருந்து கார்த்தி

வெண்ணிற இரவுகள்.


--
Posted By தமிழ் ஓசை to Tamilseithekal on 11/28/2009 04:50:00

No comments: